Thursday, 12 December 2013

மார்கழி மாத பூஜைகள்..


​ மார்கழி மாத பூஜைகள்..​

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6304-மார்கழி-மாத-பூஜைகள்

Here is the message that has just been posted:
***************
மார்கழி மாத பூஜைகள்.
16-12-2013 முதல் 13-01-2014 முடிய தனுர் மாத உஷஹ் கால பூஜை செய்ய வேண்டும்.இது தேவர்களுக்கு அதிகாலை நேரம்.. கோதண்டஸ்தே ஸவிதரி ப்ரத்யூஷே பூஜநாத் ஹரே: ஸஹஸ்ராப்தா அர்சன பலம் தினேநைகேந.ன லப்யதே

என்பதாக கோதண்டம் எனும் தநுர் ராசியில் ஸுர்யன் சஞ்சரிக்கும் மார்கழி மாதத்தில் விடிய காலையில் , ஒரு நாள் ஶ்ரீ மஹாவிஷ்ணுவை பூஜை செய்தால் ஆயிரம் வருஷம் மஹா விஷ்ணுவை

 பூஜை செய்த பலன் கிடைக்கும்.. ஒரு நாளாவது அதிகாலையில் ஸ்நானம் செய்து வீட்டில் பஞ்சாயதன பூஜை சாள்கிராம பூஜை செய்யலாமே.

ஶ்ரீ ஆண்டாள் அருலிய திருப்பாவை 30 பாட்டுக்களையும், திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி தினமும் காலையில் படிக்கலாமே. தம் தம் வழக்கப்படி


சிவ பூஜை அல்லது விஷ்ணு பூஜை தினமும் அதிகாலையில் ஸ்நானம் செய்து விட்டு செய்யவும். ஆலயங்களுக்கு செல்லவும்.அபிஷேக ஆராதனை பார்க்கவும்.

உஷ: காலே து ஸம்ப்ராப்தே  போதயித்வா ஜகத்பதிம் ஸமப்யர்ச்சய பஜேத் விஷ்ணும் ஜகதாம் தோஷ சாந்தயே.

ஸூர்ய உதயத்திற்கு முன்பாக மஹாவிஷ்ணுவிற்கு  அபிஷேகம் , துள்சியினால் அர்ச்சனை செய்து பயத்தம் பருப்பால் செய்த பொங்கலை

 நிவேதனம் செய்து பூஜை செய்தால் அந்த் க்ராமத்திற்கும், அங்கு வஸிக்கும் மக்களுக்கும் ப்ராணிகளுக்கும் தோஷம் விலகி நன்மை உண்டாகும் என்கிறது சாஸ்த்திரம். ஆதலால் கோவில்களில் பூஜை செய்கிறார்கள்.

வீட்டில் செய்யும் தினசரி பூஜையையும் அதிகாலையில் தினமும் செய்யலாம்.காலை 6 மணிக்குள் அபிஷேகம், அலங்காரம் வரை செய்துவிட்டு
ஸூர்ய உதயத்திற்கு பிற்கு அர்ச்சனை நைவேத்யம் செய்து வருவது

வழக்கத்தில் உள்ளது. இதனால் நிவேதனத்திற்கு யாதயாமதோஷம் (பழமை) வராது. ஸூரிய உதயம் இந்த மாதத்தில் காலை 6-28 முதல் 6-40 வரை உள்ளது.

16-12-2013. தத்தாத்ரேயர் ஜயந்தி.
17-12-2013. சர்பப்பலி உத்ஸர்ஜனம்.
17-12-2013. லவண தானம்.  இன்று உப்பு தானம் செய்வதால் அடுத்த பிறவியில் மிக அழகாக பிறப்பீர்கள்.


18-12-2013 திருவாதிரை.
19-12-2013- பரசுராமர் ஜயந்தி.

24-12-2013. திஸ்ரேஷ்டகா
25-12-2013 அஷ்டகா
26-12-2013 அன்வஷ்டகா


31-12-2013 க்ருஷ்ண அங்காரக சதுர்தசி. யம தர்பணம் செய்ய வேண்டும்.பிறகு யமோ நிஹந்தா என்பதாகிய பத்து நாமங்களையும் சொல்லி , நீல பர்வத ஸங்காசோ என்பதாகிய வாக்கியங்களை சொல்லி நமஸ்கரிக்க வேண்டியது..


1-1-2014 ஹனுமான் ஜயந்தி; அமாவாசை.


5-1-2014 மஹா வ்யதீ பாதம்
11-1-2014. வைகுண்ட  ஏகாதசி.
13-01=2014. போகி பண்டிகை.

மஹா வ்யதீ பாதம். இருபத்தேழு ந்க்ஷத்திரங்கள் இருப்பது போல் 27 யோகங்கள் உண்டு. இதில் ஒன்று வ்யதீ பாத யோகம். வருடத்திற்கு 96 தர்பணங்கள் செய்பவர்கள் ஒவ்வொரு வ்ய்தீ பாத யோகத்தன்று தர்பணம் செய்ய வேண்டும்.

மார்கழி மாத வ்யதீபாதத்திற்கு மஹா வ்யதீ பாதம் என்றும், தநுர் வ்யதீ பாதம் என்றும் அழைப்பர் .இந்த நாளில் காலை நித்ய கர்மா முடித்துவிட்டு ஒரு செம்பு (காப்பர்) தாமிர பாத்திரத்தில் நாட்டு சக்கரையை நிரப்பி அதன் மேல் தங்கம் அல்லது வெள்ளி ப்ரதிமையில் வ்யதீபாதம் ஆவாஹ்யாமி என்று ஆவாஹனம் செய்து ஸ்மராம் யஹம் வ்யதீபாதம் வீதஹவ்யாந்வயோத்பவம்.  ப்ரத்யங்முகம் பாடயந்தம் வேதாந் சிஷ்யாநஹர்நிசம்.

 ஓம் பூ: வ்யதீபாதம் ஆவாஹயாமி; ஓம் புவ: வ்யதீபாதம் ஆவாஹயாமி; ஓம் ஸுவ: வ்யதீபாதம் ஆவாஹயாமி. ஓம் பூர்புவஸ்ஸுவ: வ்யதீபாதம் ஆவாஹயாமி. ஓம் நமோ வ்யதீபாதாய

 என்று பூஜையும் ஜபமும் செய்யவும்.16 உபசார பூஜை செய்யவும்.ஓம் வ்யதீபாத தே நம: என்று 108 முறை ஜபிக்கவும்.சக்திக்கு தகுந்தவாறு தானம் செய்யவும்.

சந்திர க்ரஹணம், வ்யதீபாதம் போன்ற நாட்களில் செய்யும் தானம் எண்ணிலடங்கா பலனை வாரி வழங்கும்..ஏழைகளுக்கு தானம் செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், கார்ய ஜயம், விரும்பிய அனைத்தும் கிட்டும் என்கிறது புராணம்.

வ்யதீபாத தினத்தில் செய்யும் ஜபம், பூஜை, தானம், ஹோமம், இவைகளுக்கு அளவற்ற பலன் உண்டு. அதிகாலையில் சங்கல்பம் செய்துகொண்டு ஸ்நானம் செய்யவும்.

5-1-2014 வ்யதீ பாத பூஜை ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் வ்யதீபாதத்தன்று இம்மாதிரி பூஜை செய்து அடுத்த மார்ழியில் முடிக்கவேண்டும்.உத்யாபன பூஜை செய்து ப்ரதிமை தானம், படுக்கை தானம் அன்ன தானம் பஞ்ச தானம் செய்ய வேண்டும். .

இவ்வாறு செய்பவர்களுக்கு நல்ல புத்ரன். சுகமான வாழ்க்கை, பிறிந்த உற்றார் உறவினர் சேர்க்கை போன்றவை ஏற்படும்.
***************

Monday, 9 December 2013

கிச்சன் டிப்ஸ்.

​கிச்சன் டிப்ஸ்.​


This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6220-கிச்சன்-டிப்ஸ்

Here is the message that has just been posted:
***************
 வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும். அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.
* சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்த பிறகு, அதை பிரிஜ்ஜில் 2, 3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.
* பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க, ஒரு பாட்டிலில் மிளகாயுடன் மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை போட்டு, இறுக மூடி வைக்க வேண்டும்.
* பயறு வகைகளை வாங்கியதும், அவற்றை வெறும் கடாயில் போட்டு, லேசாக சூடாக்க வேண்டும். அதன் பின், டப்பாவில் போட்டு வைத்தால், பூச்சி பிடிக்காது.
* பருப்பு ரசம் செய்றீங்களா? இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி, ரசம் நுரைத்து வரும் போது போடுங்கள். அதன் சுவை சூப்பராக இருக்கும்.
* தோசை பொடி அரைக்கும் போது, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை வறுத்து, பருப்புடன் சேர்த்து அரைக்க வேண்டும். இப்படி செய்வதால், வாசனையாக இருப்பதுடன் எளிதில் செரிக்கும்.
* வெங்காய பக்கோடா கமகமவென்று இருக்க வேண்டுமா? பக்கோடா செய்யும் போது, பாதி வெங்காயத்தையும், சிறிது இஞ்சியையும் மிக்சியில் விழுதாய் அரைத்து, அதை மாவில் கலந்து பக்கோடா செய்யுங்கள். பிறகென்ன, வாசனை ஊரையே தூக்கும்.
* ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, உணவின் சுவையும் சூப்பராக இருக்கும்.

* முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்களை வாங்கும் போது, அவற்றின் இலைகளோடு சேர்த்து வாங்க வேண்டும். அந்த இலைகளை பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். சூப் தயாரித்தும் சாப்பிடலாம்.
* அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
* பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்
* தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.
* தேங்காய் துருவும் போது, தேங்காய் ஓடும் சேர்ந்து வரும் அளவிற்கு துருவக் கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.
* துவையல் அரைக்கும் போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது மிளகு.
* துவரம்பருப்பை வேக வைக் கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
* வெள்ளி நகைகள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு கற்பூரத்தை போட்டு வைத்தால் நகைகள் கறுக்காது.

***************

பாட்டி வைத்தியம்


​பாட்டி வைத்தியம்​

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6266-பாட்டி-வைத்தியம்

Here is the message that has just been posted:
***************
1. தும்மல் நீங்க!
வெந்தயம் 100 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 100 கிராம் மூன்றையும் லேசாக வறுத்துப் பொடி செய்து காலை மாலை 1/4 தேக்கரண்டி எடுத்து தேனுடன் குழைத்துச் சாப்பிடலாம் அல்லது பகல் இரவு உணவுடன் பிசைந்து சாப்பிடலாம்.
2. பூச்சிகள் போக...
குடலில் சேரும் பூச்சிகள் வெளியேற வேப்பந்துளிர் 10 எடுத்து வெல்லம் சேர்த்து சாப்பிட, மலத்துடன் அவை வெளியேறும். நான்கு நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
3. இளமை நீடிக்க...
சீமை இலந்தைப்பழம் உண்பதற்குச் சுவையாக இருக்கும். தினம் ஐந்து முதல் பத்துப் பழங்களை வெறும் வயிற்றில் உண்டு வந்தால் இளமை நீடிக்கும். இல்லற சுகம் சோர்வு பெறாது. மகப்பேறு வாய்க்கும்.
4. இரத்த சோகை நீங்க...
வெறும் வயிற்றில் தினம் ஆப்பிள்+மாதுளை சுவைநீர் கலந்து தேன் 2 தேக்கரண்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு உயரும். இரத்தசோகை நீங்கும். இரத்தப் புற்று நோய் நோயாளிகளுக்கு இது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

5. முக்கனி சுவையில்..
மா, பலா, வாழை எனும் தமிழ் கனிகள் முறையே வாத, பித்த, கபநிலைகளைக் கட்டுப்படுத்துபவை ஆகும். இவைகளை உணவில் ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டால் நிச்சயம் நிலையான உடல் நலத்தைப் பெறலாம்.
6. பலம் தரும் பலா...
பலாக் காயினை துண்டுகளாக்கி உருளைக்கிழங்கு வருவல் போல் செய்துண்ணலாம். காம வேட்கையைத் தூண்டும் ஆற்றல் பலாக்காய்க்கு உண்டு. அதற்காக அன்றாடம் செய்து உண்டால் வாதம், செரிக்காமை, ஆகியன உண்டாகும். மாதமிருமுறை உண்பதே சிறப்பு. போதை நஞ்சுகள் முறியும்.
7. மூல நோய் தணிய...
நாட்டுக் கருணையின் தண்டினைப் பாசிப்பருப்புடன் பொரியலாகச் சமைத்துண்ண இரத்த மூலம், சதை மூலம் தணியும். பசியும் செரிமானமும் நிலைபெறும். மாதம் 1 முறை உண்ணலாம்!


8. நல்லா செரிமானமாக...
தினசரி பகல் உணவில் மட்டுமே சுத்தமான சுக்குப் பொடி 1/2 தேக்கரண்டி எடுத்து 1 பிடி சாதத்தில் கலந்து 1/4 தேக்கரண்டி நெய் அல்லது நல்லெண்ணை விட்டுப் பிசைந்து சாப்பிட அன்றைய உணவு முழுமையாக செரிக்கப்பட்டு, சாரம் இரத்தத்தில் கலக்கும். சக்கை மலக்குடல் வழி வெளியேறும்


இயற்கை உணவும் இனிய வாழ்வும்


***************

Saturday, 7 December 2013

அவசர கால முதலுதவி முறைகள்

​அவசர கால முதலுதவி முறைகள்​


This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6243-First-aid

Here is the message that has just been posted:
***************
தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்...

அவசர கால முதலுதவி முறைகள்...! வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே  மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் : உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள். வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி : கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.


வயிற்றுப் பிரச்னைகள் : தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும். கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும்.

இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.
***************

Wednesday, 4 December 2013

*ரத்த விருத்தி தரும் வாழைக்காய்:-*


​*ரத்த விருத்தி தரும் வாழைக்காய்:-*​

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6183-ரத்த-விருத்தி-தரும்-வாழைக்காய்

Here is the message that has just been posted:
***************
*ரத்த விருத்தி தரும் வாழைக்காய்:-*


 வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம்.

 அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை.

 மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது.

 இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

 பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.

 வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.

 வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும்.

 உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி  வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள்.

 பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.

 இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும்.

 வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும்.

 ஆனால் வாய்வு மிகும்.

 அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.

 பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி  மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம்  ஆகியவை நீங்கும்..

Source: Ananthanarayanan Ramaswamy
***************

Monday, 2 December 2013

Fwd: New Post/Thread Notification: News & Knowledge to Share

​கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6157-கெ
ட்டிமேளம்-ஒலிக்கச்-செய்வது-ஏன்

Here is the message that has just been posted:
***************
*திருமணத்தில் தாலிகட்டும் போது
 கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்? *
 ----------------------------------------------------


Attachment 1572 (http://www.brahminsnet.com/forums/attachment.php?attachmentid=1572)
 இருவர் இணையும் நிகழ்ச்சியான திருமணத்தின் முத்தாய்ப்பான விசயமே  தாலிகட்டுதல் ஆகும்.அந்த நேரத்தில்,மணவிழாவில் கலந்துகொள்பவர்கள் பலரும் பல  விசயங்களை பேசிகொண்டிருப்பார்கள் அதில் கெட்டதும் இருக்கலாம்.

 தேவையற்ற பேச்சுகளையும்,சத்தத்தையெல்லாம் அடக்கும் வகையில், சத்தமாக மேளம்  வாசிக்கும்போது, கவனம் மணமேடை பக்கம் திரும்பி விடும். அப்போது அட்சதை  தூவி மணமக்களுக்கு ஆசிர்வதிக்க வேண்டும் என்பதற்காக கெட்டிமேளம்  முழக்கப்படுகிறது.

 மேலும் கெட்ட சகுனங்களான தும்மல்,தேவையில்லாத சத்தங்கள்,அபசகுனமான வார்த்தைகள் கெட்டிமேளம் அடிக்கும்பொழுது மறைந்துவிடும்.

 அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.


***************
ஶ்ரீ:

பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன் அவர்கள் அன்பான கவனத்திற்கு:

இதில் உள்ள கெட்டிமேளம் பற்றிய விபரம் சரியானதுதான்,
ஆனால், திருமணத்தின் முத்தாய்ப்பான விசயம் தாலிகட்டுவதுதான் என்பதை மட்டும்
ஒப்புக்கொள்ள இயலாது.
ஏனெனில் வைதீக முறைப்படியான திருமணத்தில்
தாலிகட்டுவது என்பது ப்ரயோகத்தில் கொடுக்கப்படாத
இடைக்காலத்தில் நடைமுறையில் ஏற்பட்ட ஒரு இடைச்செருகல்.
தாலி கட்டுவது பற்றி வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை,
அந்த நிகழ்ச்சிக்கு வேத மந்திரமும் கிடையாது.
பாணிக்ரஹணம் என்னும் கைப்பற்றுவதுதான் வேத விதியாகும்.
இன்றளவும் திருமண பத்திரிகைகளில்
"பாணிக்ரஹணம் செய்துகொள்வதாய்" என்றும்,
"கன்னிகாதானம் செய்து கொடுப்பதாய்" என்றுமே
குறிப்பிடப்பட்டு வருகிறது.
எனவே தாலிகட்டும் நிகழ்ச்சி முத்தாய்ப்பானது அல்ல
என்பது அடியேனின் அபிப்ராயம்.
என்.வி.எஸ்
***************

Saturday, 30 November 2013

Specialties of Paranthaman Panchangam - 02

​​
​Sri:
மேலும் சில பொதுவான சிறப்பம்சங்கள் :
ஆங்காங்கே இடம் உள்ள இடங்களில் எல்லாம் ஆஸ்திகர்களுக்குத் தேவையான மிக முக்கிய தகவல்களான:
1. ஜன்ம - அநுஜன்ம - த்ரிஜன்ம நக்ஷத்திரங்களில் செய்யத் தகுந்தவை தகாதவை பற்றிய தகவல்கள்.
2. குளிகை காலத்தில் செய்யத் தக்கவை - தகாதவை
3. நாழிகை - மணி  - மணி -நாழிகை மாற்ற எளிய கணக்கு
3. மரணத்தில் தீட்டு விஷயம் (யார் யாருக்கு எத்தனை நாள் தீட்டு)
4. அதுபோல் ஜனனத்தில் யார் யாருக்கு எவ்வளவு நாள் தீட்டு
5. தீட்டு, தோஷம் போக - பஞ்சகவ்ய ஸம்மேளனம் செய்யும் முறை மந்திரத்துடன்.
6. தனிஷ்டா பஞ்சமி, மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் விபரங்கள்.
7. அக்னி நக்ஷத்திர காலங்களில் செய்யத் தகுந்தவை, தகாதவை.
8. ஒரு வருடம் முழுமைக்கும் அமாவாசை, மாதப் பிறப்பு, மஹாளய தர்பண சங்கல்பங்களில் மாற்றிக்கொள்ளவேண்டிய தகவல்கள்​
​ - கையடக்கமாக ஒரே பக்கத்தில் (இதை மட்டும் ஜெராக்ஸ் எடுத்து லேமினேட் செய்து வைத்துக்கொண்டால் ஒரு வருடத்துக்கும் உபயோகமாக இருக்கும்).
9. யஜூர் உபாகர்மா மந்த்ரங்கள் அந்தந்த வருடத்திற்குறிய மாற்றங்களுடன், சங்கல்பம் மற்றும் காண்டருஷி தர்பண மந்த்ரங்கள்.
10. காயத்ரி ஜப சங்கல்பம்.
11. நடப்பு வருடத்திற்குறிய முஹூர்த்தங்கள் அந்தந்த மாதத்திற்கான பக்கங்களிலேயே வழங்கப்பட்டிருப்பதுடன்,
அடுத்த ஒரு வருடத்திற்கான முஹூர்த்தங்கள் 19ம் பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும். (இந்தத் தகவலை வழங்கும் ஒரு சில பஞ்சாங்கங்கள் கூட கார்த்திகை (டிசம்பர்) மாதம் வரைதான் முஹூர்தங்களை வழங்குகின்றன. ஆனால் நாம் அடுத்த பங்குனிவரை முஹூர்த்தங்களை வழங்குவதுடன். அடுத்த வருட 12 மாதங்களுக்கான க்ரஹ நிலைக் கட்டங்களையும் க்ரஹபாத சாரத்துடன் வழங்குகிறோம் என்பது மிக மிக குறிப்பிடத்தக்கதாகும்.
12. நமது சொந்தக் கண்டுபிடிப்பான ச்ராத்த திதி அட்டவணை, இதுவரை வேறு எந்த பஞ்சாங்கத்திலும் காண இயலாது. ச்ராத்த திதியை கண்டுபிடிப்பதில் பெரும்பான்மை ஆஸ்திகர்களுக்கும் மிக சிரமம் உள்ளது. எனவே சுக்ல - க்ருஷ்ண - ப்ரதமை முதல் பௌர்ணமி - அமாவாசை வரை இடது பக்கம் மேலிருந்து கீழாகவும், சித்திரை முதல் பங்குனி வரை மேலே இடமிருந்து வலமாகவும் குறிப்பிட்டு, அந்தந்த திதி அந்தந்த மாதத்தைச் சந்திக்கும் இடத்தில் ச்ராத்திற்கான சரியான தேதி குறிப்பிடப்பட்டிருக்கும் இதனால் சுலபமாக ச்ராத்த திதியைக் கண்டறியலாம். சில சமயம் ஒரு ச்ராத்தத்தின் திதி அந்த மாதத்தில் இடம்பெறாமல் முன் மாதம் அல்லது அடுத்த மாதத்தில்கூட பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், சில சமயம் மாதத்தின் ஆரம்பத்திலும், மாதத்தின் கடைசியிலும் இரு முறை ச்ராத்த திதி குறிப்பிடப்பட்டு உள்ளே உள்ள விபர பகுதியில் இது அடுத்த மாதத்திற்குறியது என்று குறிப்பிட்டிருப்பார்கள், அதை கவனிக்கத் தவறினால் குழப்பமே மிஞ்சும்.
மேலும் தயார், தகப்பனார் மாஸ்யங்களைச் செய்யும் கர்த்தாக்களுக்கும், வாத்யார்களுக்கும் இது மிக மிக உதவிகரமாக அமையும். ஏனெனில் ஒருவர் க்ருஷ்ண அஷ்டமியில் பரமபதித்தால் அவருக்கான ஒரு வருடத்திற்கான திதிக்குறிய தேதிகளை ஒரு வரியில் உள்ளதால் சில நொடிகளில் குறித்துக்கொள்ளலாம்.

இங்கே வழங்கப்பட்டுள்ளவற்றில் பெரும்பாலான தகவல்கள் மற்ற பெயர்பெற்ற பஞ்சாங்கங்களில் காண இயலாது.

நம் பஞ்சாங்கத்தின் பெருமைகள் மேலும் தொடரும் ......
 NVS