Tuesday 29 July 2014

Leave the three and be happy!

 How to have sukham?.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8447-How-to-have-sukham

Here is the message that has just been posted:
***************
लोभ-मूलानि पापानि, रस-मूलानि व्याधयः ।
इष्ट-मूलानि शोकानि, त्रीणित्यक्त्वा सुखी भव ॥

lobha-mūlāni pāpāni, rasa-mūlāni vyādhayaḥ ।
iṣṭa-mūlāni śokāni, trīṇi tyaktvā sukhī bhava ॥


sins have root in greed, diseases have root in taste.
sorrows have root in desire, leave the three and be happy
​!​


Courtesy: Sri.VVR
***************

Monday 28 July 2014

புரட்டாசி-மாத-விரதங்கள்

புரட்டாசி மாத விரதங்கள்..

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8378-புரட்டாசி-மாத-விரதங்கள்

Here is the message that has just been posted:
***************
"


      புரட்டாசி மாத பண்டிகைகள்.

மஹாளய பக்ஷம்:--09-09-2014 முதல் 24-09-2014 முடிய
நமது வாழ்க்கை உயர்வதற்கு  உதவி செய்துள்ள நமது. பெற்றோர், தாத்தா, பாட்டி, அத்தை,, குரு, ஆசிரியர் முதலானோருக்கு நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பே மஹாளய பக்ஷ காலமாகும்..


மஹாளயம் என்றால் மஹான்களின் இருப்பிடம் . . இறந்து போனாலும் கூட நமது பித்ருக்கள் இந்த சமயத்தில் வருடந்தோறும் நமது வீடு தேடி வருகிறார்கள். இவர்களுக்கு நாம் அன்ன மளிக்க வேண்டும்.


மஹாளயத்தை நாம் பார்வணம், ஹிரண்யம், தர்ப்பணம் ஆகிய மூன்று வழிகளில் செய்யலாம்.  பார்வணம் என்பது ஆறு ப்ராஹ்மணர்களை பித்ருக்களாக வரித்து ஹோமம் செய்து ப்ராஹ்மணர்களுக்கு சாப்பாடு போடுவது. ,


ஹிரண்யம் என்பது  பச்சரிசி, வாழைக்காய், தக்ஷிணை கொடுத்து
தர்பணம் செய்வது.


தர்பணம் என்பது தானாகவே அமாவாசை தர்பணம் செய்வது போல் மஹாளய பக்ஷம் 16 நாட்களும் தினமும் தர்பணம் செய்வது.  இவற்றில் ஏதாவது ஒன்று செய்து பித்ருக்களை த்ருப்தி செய்வது நமது கடமை ஆகும்.


ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள் மஹா பரணி(13-9-14
மத்யாஷ்டமி (16-9-14) மஹா வ்யதீபாதம் (17-9-14) கஜசாயை (21-9-14) . தகப்பனாரின் திதி ஆகிய நாட்களில் செய்யலாம். .இவை மிகவும் சிறந்த நாட்கள் ஆகும்.


மற்ற நாட்களில் செய்வதாக இருந்தால் கர்த்தா, கர்த்தாவின் மனைவி, மூத்த குமாரன் பிறந்த நக்ஷத்திரம் ... ப்ரதமை, சஷ்டி, ஏகாதசி, வெள்ளிக்கிழமை, , வ்யதீபாத ஸம்பந்தமில்லத ரோஹிணி, ரேவதி, , த்ரயோதசி ஸம்பந்தமில்லாத மகம்,    இல்லாத நாட்கள் பார்த்து செய்ய வேண்டும். ஆதாரம் நிர்ணய ஸிந்து.,


ஸன்யாஸியாக ஸித்தி ஆனவர்களுக்கு 20-9-14 அன்று தான்  செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் இன்று செய்யலாம்.


ஆக்ஸிடென்ட் முதலியவைகளால் துர் மரணமடைந்த வர்களுக்கு  (இயற்கையாக மரண மாகாதவர்களுக்கு மட்டும்) 22-9-14 அன்று செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு இன்று செய்யக்கூடாது.


23-9-14 அமாவாசை அன்று ப்ருஹ்மசாரி ஒரு நாள் செய்யும் மஹாளயம் செய்யலாம். கணவனுக்கு மனைவி செய்யும் மஹாளயம் செய்யலாம்.
 மற்ற யாரும் 22-9 மற்றும் 23-9-14  இரு தினங்களும் ஒரு நாள் செய்யும் மஹாளயம் செய்யக்கூடாது.


மஹாளய பக்ஷத்தில் தாய் தந்தைக்கு  ( வருடா வருடம் செய்யும் சிராத்தம் வந்தால் )முதலில் சிராத்தம் செய்துவிட்டு அதன் பிறகு மஹாளய பக்ஷத்திற்குள் மற்றொரு நாளில் நாள் பார்த்து  மஹாளயம் செய்ய வேண்டும்.


17-9-2014 அவிதவா நவமி  சுமங்கலி ப்ரார்த்தனை இன்று செய்யலாம்.
நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல முறையில் வளர்க்கப்பட்டு  நல்ல கணவரை அடைந்து  கணவரின் கோபதாபங்களையும்  குழந்தைகளின் கஷ்ட நஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு குடும்பத்தை தூணாக நின்று கப்பாற்றி


 , அனைவரையும் ஒன்றினைத்து , முக்கியமாக நமது கலாசாரத்தையும் , வைதீக தர்மங்களையும் , ஸம்ப்ரதாயங்களையும் கடைபிடித்து வாழும் பெண்மணியே பதிவ்ரதை என்று அழைக்கப்படுகிறாள்.


இப்படிப்பட்ட பெண்களுக்கு கிடைக்கும் ஒரு பாக்கியம் தான் தனது கணவனுக்கு முன்னால் பூவும் பொட்டுமாக பரம பதம் அடைவது.. இவ்வாறு ஒரு குடும்பத்தில் ஸுமங்கலியாக  இறந்திருந்தால் அந்த பெண்ணுக்கு சிராத்ததிற்கு மறு நாள் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்ய பட வேண்டும்.


இந்த ஸுமங்கலி ப்ரார்த்தனை சிராதத்திற்கு சமமானது.


இது போலவே பெண்களை குறித்து மஹாளய பக்ஷத்திலும் ஒரு நாள்
ஸுமங்கலியாக  இறந்தவர்களுக்காக வஸ்த்ரம் கொடுத்து சாப்பாடு போட்டு அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.


இந்த நாள் தான் அவிதவா நவமி எனப்படுகிறது.
""பர்துரக்ரே  ம்ருதா நாரி ஸஹ தாஹேந  வா ம்ருதா  தஸ்யா: ஸ்தானே நியுஞ்சீத விப்ரைஸ்  ஸஹ ஸுவாஸினீம்  ( தர்ம ஸிந்து-73 ).


தனது கணவருக்கு முன்போ அல்லது தனது கணவருடன் சேர்ந்தோ இறந்து போன ஸுமங்கலிகளின் த்ருப்திக்காக ஸுவாஸினி பெண்களை வீட்டிற்கு வரவழைத்து வஸ்த்ரம் தந்து சாப்பாடு போட்டு  ஆசீர்வாதம் பெற வேன்டும் என்கிறது தர்ம ஸிந்து.


கணவனை இழந்த பெண் விதவா. ஸுமங்கலி பெண்  அவிதவா எனப்படுகிறாள்.. மஹாளய பக்ஷத்தில் அ விதவா நவமி அன்று சுமங்கலி ப்ரார்த்தனை செய்யலாம்..


25-9-2014. தெளஹித்ரப்ரதிபத்:--


புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் ப்ரதமை அன்று  தனது தாயாரின் பெற்றோர்களுக்கு சாப்பாடு, வஸ்த்ரம், பரிசு, ஆபரணங்கள் வாங்கி தர வேண்டும். . தனது தாயாரின் பெற்றோர் விரும்பும் இடத்திற்கு க்ஷேத்ராடனம் அழைத்து செல்ல வேண்டும்..


25-9-14 முதல் 3-10-14 முடிய நவராத்திரி




8-10-14 சந்திர கிரஹணம்.சந்திரன் உதய நேரம் 5-53 பி. எம். மோக்ஷம் 6-04 பி. எம். . 11 நிமிடங்களே புண்ய காலம்.  மோக்ஷ ஸ்நானம் செய்து போஜனம் செய்யலாம் ...பகல் போஜனம் வேண்டாம்.
***************

Saturday 19 July 2014

Lot of questions about Vratams , TarpaNams , SrAddhams and Vaidhika Kaaryams

SrI:
 
Dear All :
 
I get a
​​
lot of questions about Vratams , TarpaNams , SrAddhams and Vaidhika Kaaryams . Being not a trained Bruhaspati , I can not  answer your queries accurately .
 
We have with us however an extremely competent and practicing Bruhaspati , Sriman NVS Swamy at Chennai , the Founder/owner of both the Vaideekam Group and Brahminsnet , who can  addresses the information needs of all AastikAs regarding Vaideeka Kaaryams  .He has all the Multimedia equipment to assist in Vaidhika Kaaryams thru Skype and similar  telecommunication/Multimedia services .
 
Please enroll in the Vaideekam Yahoo groups and Brahmins net by writing to Sriman NVS Swamy , the source of many treasures on daily observances and Vaidhika KarmAs . He is so generous with his time . Your support will help him a great deal . Please support him and his work of value to you and send appropriate sambhAvanAs .
 
As a general observation , All of us involved in Kaimakryams like this are struggling to cope with increasing needs and requests  for information on questions relating to our sampradhAyam . While we do not mind spending huge chunks of personal time to create these sites and answer questions after consulting with our AchAryAs, we are loosing the battle to cover all expenses .   Maintaining these  web sites , providing fresh content, creating Print ready books  and accepting new Kaimkaryams are boggling us all down  . Fortunately few dedicated volunteers are  sharing the kaimkaryam load . Ultimately , we might have to close these sites for lack of support and create a annual Membership based access to content to cover the ever increasing expenses . For the past 20 years , adiyEn has  presented the content as Vidhyaa Daanam; I am happy to know that the content is being actively used . There are 350 Plus ebooks at the many web sites included in the http://www.sadagopan.org portal  for your active use thru downloading . There are 30,000 pages of content  relating to PoorvAchArya Sri Sooktis ,Veda Bhaagams , Ahnikams ,   divya Prabhandhams , divya desams and many more . Individual stotrams with meanings and extended commentaries and digital images form these sites have been down loaded tens of thousands of time . For instance , SrI Stuti book and Mantra Pushpam alone have been downloaded more than 5,000 times .
 
Please contact adiyEn and support the Kaimkaryams to continue without interruption . Please provide  samarpaNams yathaa sakti to continue with the kaimakryams and grow  further the sampradhAyam . adiyEn will be happy to suggest ways in which you can support us . $50 to $100 annual membership by interested AstikAs addressed to adiyEn here and Yathaa sakti samarpaNams in Rupees in India to Sriman NVS Swamy would help a great deal . adiyEn hopes to enroll
a  minimum of 100-200  members in support of Sadagopan.org portal access program . This will be an one time appeal on my part for the 2014-2015 Membership year . Please contact adiyEn  thru email , if you wish to become a supporting Member this year .
 
NamO SrI NrusimhAya,
V.Sadagopan  
 


__,_._,___

13-8-2014;-- மஹா சங்கடஹர சதுர்த்தி.

மஹா சங்கடஹர சதுர்த்தி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8223-மஹா-சங்கடஹர-சதுர்த்தி

Here is the message that has just been posted:
***************
13-8-2014;-- மஹா சங்கடஹர சதுர்த்தி.

1ஒவ்வொரு மாதமும் தேய்பிறை ( கிருஷ்ண பக்ஷம்) சதுர்த்தி திதிக்கு ஸங்கட ஹர சதுர்த்தி எனப் பெயர். ஆனால் சிராவண மாத தேய் பிறை சதுர்த்திக்கு மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்பெயர்.

ஒரு வருடம் தம்பதியாக இன்று ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் இந்த விருதத்தை அநுஷ்டிக்கலாம்.

""சிராவணே பகுளே பக்ஷே சதுர்த்யாம் து விதூதயே கணேசம் பூஜயித்வா து சந்த்ராயார்க்யம் ப்ரதாபயேத்""

இன்று பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கணபதி படம் அல்லது விக்கிரஹம் வைத்து , மம வித்யா-தன- புத்ர- பெளத்ராதி ஸுக ப்ராப்தியர்த்தம்  ஸர்வ ஸங்கஷ்ட நிராஹரணார்த்தம் ஸங்கடஹர கணபதி பூஜாம் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கொண்டு

  அஸ்மின் படே கஜாஸ்யாய நம: ஆவாஹயாமி; விக்னராஜாய நம: ஆஸனம் சமர்பயாமி.  ஏகதந்தாய நம: பாத்யம் ஸமர்பயாமி ;;சங்கர ஸுநவே நம: அர்க்கியம் ஸமர்பயாமி; உமா ஸுதாய நம: ஆசமனீயம்

ஸமர்பயாமி;  வக்ரதுண்டாய நம: பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்பயாமி;
ஹேரம்பாய நம: ஸ்நானம் ஸமர்பயாமி; சூர்ப்ப கர்ணாய நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி; குப்ஜாய நம: யக்ஞோபவீதம் ஸமர்பயாமி;

கெளரீ புத்ராயகணேஸ்வராய நம : கந்தம் ஸமர்பயாமி; உமா புத்ராய நம:
அக்ஷதான் ஸமர்பயாமி; சிவஸுநவே நம: புஷ்ப மாலாம் ஸமர்பயாமி;
விக்ன நாசினே நம: புஷ்பானி பூஜயாமி; விகடாய நம: தூபம் ஆக்ராபயாமி

வாமனாய நம: தீபம் தர்சயாமி; சர்வாய நம: நைவேத்யம் நிவேதயாமி;
21 கொழுக்கட்டை (மோதகம்) –நிவேதனம்; ஸர்வார்த்தி நாசினே நம: பலம் ஸமர்பயாமி( பழங்கள் நிவேதனம் செய்யவும்); விக்ன ஹர்த்தரே நம;

தாம்பூலம் ஸமர்பயாமி; ஸர்வேஸ்வராய நம: தக்ஷிணாம் ஸமர்பயாமி;
ஈச புத்ராய நம: கற்பூர நீராஜனம் ஸமர்பயாமி;  என்று சொல்லி உபசார பூஜைகள் முடித்து விட்டு பசும்பால் அல்லது சந்தனம் கலந்த நீரால் கீழ்

கண்ட 4  சுலோகம் சொல்லி கணபதியின் முன்பாக ஒரு கிண்ணத்தில் அர்க்கியம் விடவும்.

1, க்ஷீர ஸாகர ஸம்பூதஸுதா ரூப நிசாகர; க்ருஹாணார்க்யம் யா தத்தம்
கணேச ப்ரீதி வர்த்தன  ரோஹிணி ஸஹித சந்த்ர மஸே நம: இதமர்க்கியம்,
இதமர்க்கியம், இதமர்கியம்;

2. கணேசாய நமஸ்துப்யம் ஸர்வஸித்தி ப்ரதாயக ;ஸங்கஷ்டம் ஹர மே தேவ க்ருஹாணார்கியம் நமோஸ்துதே கணேசாய நம: இதமர்க்கியம்;
இதமர்கியம், இதமர்க்கியம்.

3.கிருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் து பூஜிதஸ் த்வம் விதூதயே க்ஷிப்ரம்
ப்ரஸாதிதோ தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதமர்கியம்,இதமர்கியம், இதமர்கியம்.

4.திதீ நாம் உத்தமே தேவி கணேச ப்ரிய வல்லபே  ஸர்வ ஸங்கஷ்ட நாசாய
சதுர்த்யர்கியம்  நமோஸ்துதே; -சதுர்தியை நம; இதமர்கியம்; இதமர்கியம், இதமர்க்கியம்.

கணபதியின் எதிரே தம்பதிகளாக உட்கார்ந்து கொண்டு ""ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம ஸர்வ ஸங்கஷ்டம் நிவாரய நிவாரய ஹூம் பட் ஸ்வாஹா""

என்னும் மந்திரத்தை 4444 அல்லது 444 தடவை ஜபிக்கவும்.

பிறகு கணபதிக்கு நிவேதனம் செய்த 21 கொழுகட்டைகளில் ஒரு ஐந்து கொழுகட்டைகளை ஏதாவது ஒரு குழந்தைக்கு கொடுத்து சாப்பிட சொல்லவும். மீதியை நீங்கள் .கணபதியை ப்ரார்த்திக் கொண்டு, சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாம்.

இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அர்க்கியம் மட்டும் தந்து விட்டு சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாமே. இதனால் அனைத்து இன்னல்களும் விலகும் என்கிறது கணேச புராணம்.
***************

8-9-2014 அனந்த பத்மநாப விரதம்

அனந்த வ்ருதம்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8234-அனந்த-வ்ருதம்

Here is the message that has just been posted:
***************
8-9-2014 அனந்த பத்மநாப விரதம்:--
பகவான் நாராயணன் அனந்தன் அல்லது ஆதிசேஷன் என்ற பெயருடன் பாதாள லோகத்திலிருந்து  பூமியை தன் ஆயிரம் தலைகளால் தாங்கி கால சக்கிரத்தை நடத்துகிறார். இவ்வாறு தன் தலைகளால் ஒரு கல்பத்தில் பூமியை தாங்க ஆரம்பித்த நாளே இது.

முதலில் யமுனைக்கு பூஜை செய்ய வேன்டும். பிறகு 14 தர்பைகளால் அனந்தன் உருவம் அமைத்து( தலை பின்னல் மாதிரி பின்னி) ஐந்து தலைகளுடன் கலசத்தில் வைத்து 14 முடியுள்ள பட்டு கயிற்றையும் 14 ஆவரண தேவதைகளையும் ஆவாஹனம் செய்து

அக்கயிற்றை இடது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.. பிராமணருக்கு தக்ஷிணை தாம்பூலம் தந்து 14 ஆண்டுகள் கழித்து உத்யாபனம் செய்ய வேண்டும்.  அனந்தன் அருளால் அனந்தமான பாக்கியம் பெறலாம்.

விரத பூஜா விதானம் புத்தகத்தில் பூஜை முறை உள்ளபடி பூஜை செய்யலாம்.
விரத சூடாமணி புத்தகத்தில் அனந்தன் ஆவரண பூஜையும் உத்யாபனம் செய் முறையும் உள்ளது.

.
***************

9-9-2014:--உமா மஹேஸ்வர விரதம்.

உமா மஹேஸ்வர வ்ருதம்.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8235-உமா-மஹேஸ்வர-வ்ருதம்

Here is the message that has just been posted:
***************
9-9-2014:--உமா மஹேஸ்வர விரதம்.

பாத்ரபத மாத பெளர்ணமி  அன்று உமா மஹேஸ்வரர் என்னும் பெயரில் உமாவுடன் சேர்ந்த சிவனை ஆராதிக்க வேண்டும்..

என்னென்ன விருப்பத்தை குறித்து யார் யார் செய்கிறாரோ அவர் தான் விரும்பும் அனைதையும் அடைவார் என்கிறது சிவ ரஹஸ்யம்.

உமா மஹேஸ்வர விருதத்தில் சிவனை 16 வடிவத்தில் 16 கலசங்களில்  16 பூக்களால் 16 வித நிவேதனம் செய்து பூஜிக்க வேண்டும்.15 வருடம் இம்மாதிரி செய்யலாம்… இரு பட்டு கயிரில் 15 முடிச்சுகள் போட்டு பூஜையில்

வைத்து கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.. அனைத்து பாபங்கள் விலகி நல்ல தெளிவான ஞானம் பெறலாம். ஒரு ஏழை தம்பதிகளுக்கு வேட்டி, சேலை வாங்கி கொடுத்து சாப்பாடு போட்டு அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

முடியாவிட்டால் மூன்று வருடங்களாவது செய்யலாம். இந்த விரதம் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும். இரவு சிவ புராணம் கதை கேட்க வேண்டும்.அல்லது படிக்க வேன்டும்.

1, உமா மஹேஸ்வரர்; 2. சிவ: 3. சர்வர்; 4. ருத்ரர். 5. பசுபதி. 6. உக்ரர்;7. மஹாதேவர். 8. பீமர்; 9. ஈசானர்; 10. உமாபதி. 11. சம்பு; 12. . சூலி; 13. அம்ருதேஸ்வரர்.14. வாமதேவர்; 15; காலகாமர்; 16. காலாத்மா.

இந்த விரதத்தை முழுமையாக செய்ய இயலாதவர்கள் 15 முடிச்சு போட்ட ஒரு பட்டு கயிறு சிவன் ஸன்னதியில் வைத்து சிவனுக்கு அர்ச்சனை செய்து
நமஸ்தே கிரிஜா நாத பக்தாநா மிஷ்டதாயக ஆயுர் வித்தஞ்ச ஸத்கீர்த்திம்

தவ பக்திஞ்ச  தேஹி மே  என்று ப்ரார்தித்து நம: பஞ்சதச  க்ரந்தி ஸூத்ர ஸம்ஸ்தாய சம்பவே தயாகராய தேவாய சங்கராய நமோ நம: என்று சொல்லி நமஸ்கரித்து  ஹர பாபானி ஸர்வாணி சுபம் குரு தயாநிதே

க்ருபயா தேவ தேவேச மாமுத்தர பவன்ணவாத்.என்று சொல்லி பட்டு கயிறை கையில் கட்டிக்கொள்ளவும்..

இந்த விருதத்தை முறையாக செய்வதால் நம்மிடமிருந்து  பிரிந்து சென்ற உறவினர்கள்—செல்வங்கள்- சொத்துக்கள். –நல்ல குணங்கள் ஆகியவை நமக்கு திரும்ப கிடைக்கும்..
***************

7-9-2014 ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8233-ஓணம்-பண்டிகை

Here is the message that has just been posted:
***************
7-9-2014 ஓணம் பண்டிகை.

மஹாபலி சக்ரவர்த்தியிடம் மூண்றடி மண் கேட்டு மஹா பலியை அளந்து ஏற்றுக் கொண்ட நன்னாள் இது.  இன்று மஹா பலி சக்ரவர்த்தி ஆவணி திருவோணம் அன்று தான் ஆண்டு வந்த கேரள தேசத்தை காண வருகிறார். .
அவரை வரவேற்க பெருமகிழ்ச்சியுடன் வரவே.ற்கும் நாள் தான் ஓணம் .
***************

02-09-2014 தூர்வாஷ்டமி

தூர்வாஷ்டமி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8230-தூர்வாஷ்டமி

Here is the message that has just been posted:
***************
​​
02-09-2014  தூர்வாஷ்டமி

ஸிம்மே பாத்ரபதே மாஸி தூர்வா ஸம்ஞா ததாஷ்டமி என்பதாக ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும்… இன்று அருகம் புல்லை  பூஜை செய்ய வேண்டும். . சுத்தமான இடத்தில் அருகம் பில்

வளர்ந்திருக்கும் இடம் சென்றோ அல்லது அருகம்புல் பறித்து வந்து வீட்டில் ஒரு தாம்பாளத்தில் வைத்து , அருகம்புல்லுக்கு சந்தனம் குங்குமம் இட்டு நமஸ்கரித்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்திக்கலாம்.

""ஸெளபாக்கியம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்ய கரீ பவ  யதா சாகா ப்ரசாகாபிர் விஸ்த்ருதாஸி மஹீதலே ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வ மஜராமரம்" (நிர்ணய ஸிந்து)
***************

05-09-2014 விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி

பரிவர்த்தன ஏகாதசி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8231-பரிவர்த்தன-ஏகாதசி

Here is the message that has just been posted:
***************
05-09-2014 விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி:--

இன்று மஹா விஷ்ணு படுக்கையில் புரண்டு படுக்கிறார். இன்று மாலை ஶ்ரீ லக்*ஷ்மியுடன் மஹா விஷ்ணுவை பூஜை செய்து காய்ச்சிய பசும்பால் நிவேதனம் செய்யவும்.

ஹே வாஸுதேவ ஜகன்னாத, ப்ராப்தேயம் த்வாதசி தவ பார்ச்வேன பரிவர்தஸ்வ ஸுகம் ஸ்வபிஹி மாதவ. என்று ப்ரார்தித்து கொள்ளவும்.
***************

06-09-2014 வாமன ஜயந்தி

வாமன ஜயந்தி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8232-வாமன-ஜயந்தி

Here is the message that has just been posted:
***************
06-09-2014 வாமன ஜயந்தி

காச்யபருக்கும் அதிதிக்கும் மகனாக மத்யான வேலையிலின்று அவதாரம் செய்தார்.  மாத்யானிகம் ப்ருஹ்ம யக்ஞம் செய்து விட்டு வாமன மூர்த்தியை பூஜை செய்துவிட்டு ஶ்ரீமத் பாகவத்திலுல்ல வாமனாவதார பகுதியை பாராயணம் செய்யவும். சுத்த ஜலத்தால் அர்க்கியம் கொடுக்கவும்.

காலையில் ஸ்நானம் செய்து விட்டு வாமன ஜயந்தி புண்ய காலே அர்க்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ளவும்.. இரு கைகலிலும் ஜலம் எடுத்து நமஸ்தே பத்மனாபாய நமஸ்தே ஜலசாயினே துப்யமர்க்க்யம் ப்ரயஸ்சாமி பால வாமண ரூபீணே வாமநாய நம: இதமர்க்கியம்.

நம: சார்ங்க தநுர் பாந பாணயே வாமநாய ச யக்ஞபுக் பவதாத்ரே ச வாமநாய நமோ நம: வாமனாய நம: இதமர்க்கியம். ஜலத்தை பூமியில் பக்தியுடன் விடவும்.. அஹங்காரம் நீங்கும்.
***************

30-08-2014:-----ரிஷி பஞ்சமி

ரிஷி பஞ்சமி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8228-ரிஷி-பஞ்சமி

Here is the message that has just been posted:
***************
30-08-2014:-----ரிஷி பஞ்சமி—
பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமியன்று மிக முக்யமான ஏழு ரிஷிகளை பூஜிக்க வேண்டும்.1. கச்யபர். 2. அத்ரி. 3. பரத்வாஜர். 4. விசுவாமித்ரர்; 5 கெளதமர். 6. ஜமதக்னி, 7 வசிஷ்டர். .

 பென்களுக்கு மாதா மாதம் சம்பவிக்கும் அந்த மூன்று நாட்களிலும் பெண்கள் மிக கட்டுபாடுடன் நியமமாக இருக்க வேண்டும். மீறினால் அந்த பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்கிறது வேத சாஸ்திரங்கள். .

ஐம்பது வயது மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி வ்ருதத்தை கணவனுடனோ அல்லது (கணவனில்லாத பெண்) தனியாகவோ செய்ய வேண்டும்.. .

ரிஷி பஞ்சமி அன்று காலை நதி, அல்லது, குளம் அல்லது கிணறு ஆகிய ஏதோ ஒன்றில் ஸ்நானம் செய்து நாயுருவி குச்சியைக்கொண்டு கீழ் கண்ட மந்திரம் சொல்லி 108 முறை பல் துலக்க வேண்டும்.

"ஆயுர் பலம் யசோ வர்ச்ச: ப்ரஜா: பசு வஸூநி ச  ப்ருஹ்ம ப்ரக்ஞாம் ச மேதாம் ச த்வம் நோதே: வனஸ்பதி:"  பிறகு நெல்லிப்பொடியை உடலில் தேய்த்து முழுகி ஸ்நானம் செய்ய வேண்டும்.

பிறகு தன் வீட்டில் நடுவில் மண்டபம் அமைத்து அதில் கலசங்கள் வைத்து அந்த கலசங்களில் மேற்சொன்ன 7 ரிஷிகளையும் அருந்ததியையும் சேர்த்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும்.

பிறகு ஏழு வேதாத்யானம் செய்த ப்ராஹ்மணர்களை வரித்து 7 ரிஷிகளாக பாவித்து ஸப்த ரிஷிகளுக்கு நிவேதனம் செய்ததை அந்த ப்ராஹ்மணர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

அன்று இரவு இந்த மஹரிஷிகளின் சரித்ரம் கேட்க வேண்டும். மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இம்மாதிரி ஏழு வருடங்கள் செய்ய வேண்டும்.,

 இதனால் ஆத்யாத்மிகம், ஆதி பெளதிகம், ஆதி தைவிகம் என்ற மூன்று விதமான துக்கமும் விலகும். மங்களங்கள் வளரும். ஆபத்துகளில்லாத செல்வங்கள் வந்து சேரும். பெண்கள் ஸெளபாக்கியத்தை அடைவார்கள்/.
***************

31-8-2014 ஸூர்ய சஷ்டி

சூர்ய சஷ்டி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8229-சூர்ய-சஷ்டி

Here is the message that has just been posted:
***************
31-8-2014 ஸூர்ய சஷ்டி:--

தர்ம ஸிந்து-64 சொல்கிறது:--சுக்லே பாத்ரபதே சஷ்ட்யாம் ஸ்நானம் பாஸ்கர பூஜனம் ப்ராசனம் –பஞ்சகவ்யஸ்ய அச்வமேத பலாதிகம்.

பாத்ரபத சுக்ல பக்ஷ சஷ்டி திதியன்று காலையில் ஸூர்ய உதயத்திற்கு முன்பாக குளித்து விட்டு (நித்ய கர்மாக்களை முடித்து) கிழக்கே நோக்கி அமர்ந்து கொண்டு ஆதித்ய ஹ்ருதயம், கோளறு பதிகம் மற்றும் ஸூர்ய ஸ்தோத்ரங்கள் சொல்லி

 பனிரண்டு முறை ஸூர்யனை நோக்கி நமஸ்காரம் செய்து ப்ரார்தித்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் பஞ்ச கவ்யம் சாப்பிடலாம்.. அனைத்து நோய்களும் விலகும். ஆரோக்கியம் ஏற்படும் என்கிறார் திவோதாஸர் எனும் மஹரிஷி..
***************

29-08-2014:--விநாயக சதுர்த்தி:

விநாயக சதுர்த்தி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8227-விநாயக-சதுர்த்தி

Here is the message that has just been posted:
***************
29-08-2014:--விநாயக சதுர்த்தி:
பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷ சதுர்தி திதி தான் விநாயக சதுர்த்தி. இன்று தனது வீட்டின் வடக்கு பகுதியில் ஒரு மண்டபத்தில் பச்சரிசி போட்டு பரப்பி அதில் எட்டு தளத்துடன் கூடிய தாமரையை வரைந்து அத்ன் மேல் களி மண்ணாலான பிள்ளையார் வைத்து அருகம்புல் சந்தனம் ஆகியவற்றால் பக்தியுடன் பூஜிக்கவும்.

குறிப்பாக 21 அருகம்புல்லால் நல்ல வாசனையுள்ள சந்தனத்தில் தோய்த்து கீழ் கன்ட பத்து நாமாக்கள் சொல்லி இரண்டு இரண்டு அருகம் புல்லாலும் கடைசி ஒரு அருகம்புல்லால் பத்து நாமாக்களையும் சொல்லி அர்ச்சனை செய்யவும்.

1.   கணாதிபாய நம: 2. உமா புத்ராய நம: 3. அகநாசனாய நம: 4. விநாயகாய நம: 5. ஈசபுத்ராய நம: 6. ஸர்வஸித்திதாய நம: 7. இபவக்த்ராய நம: 8. ஏகதந்தாய நம: 9. மூஷிக வாஹனாய நம: 10. குமார குரவே நம;

தூப தீபம் காண்பிக்கவும். நிவேதனம்_--நெய்யில் செய்த 21 கொழுக்கட்டை;
தேங்காய் 21; வாழைப்பழம் 21; நாவல் பழம் 21; விளாம்பழம் 21; கொய்யா பழம் 21; கரும்பு துன்டு 21; வெள்ளரிக்காய் 21; அப்பம் 21; இட்லி 21;  செய்யவும்.

நடனம். பாட்டு. வாத்தியம், வேதம், புராணம் ஆகியவைகளுடன் பூஜை முடிக்கவும். 21 ப்ருஹ்மசாரி பையன்களுக்கு தக்ஷிணையுடன் நிவேதன பொருட்களை கொடுத்து , பெரியோர்களிடம் ஆசி பெறவும்.

மறுநாள் காலை புனர்பூஜை செய்து விநாயகரை யதாஸ்தானம் செய்து விஸர்ஜனம் செய்யவும்.. எந்த காரியத்திலும் இடையூறு ஏற்படாது.
***************

28-08-2014. ஹரிதாளிகா விருதம்.

ஹரிதாளிகா வ்ருதம்..

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8226-ஹரிதாளிகா-வ்ருதம்

Here is the message that has just been posted:
***************
28-08-2014. ஹரிதாளிகா விருதம்.

பாத்ரபத மாத சுக்ல பக்ஷ த்ருதியை  அன்று தேவியை பூஜித்து செய்ய வேண்டிய விருதம் இது. திருமணம் நடைபெற வேண்டிய கன்னி பெண்கள்  இன்று மாலையில் தனது வீட்டில் வ்ருஷபத்தின் மீது பார்வதியுடன்

அமர்ந்திருக்கும் சிவன் படத்தை வைத்து கெளரீ ஸஹித மஹேஸ்வராய நம: என்று சொல்லி பூஜை அஷ்டோத்ர அர்ச்சனை செய்து பதினாறு தட்டுகளில்  வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழங்கள் தேங்காய்

வைத்து நிவேதனம் செய்து தெரிந்த ஸ்தோத்ரங்கள் சொல்லி ப்ரார்தித்து  ""மயாபி யேந காமேந பூஜிதாஸி மஹேஸ்வரி ராஜ்யம் தேஹி ச ஸெளபாக்கியம் ப்ரஸன்னாப வ பார்வதி"" (ஸ்மிருதி கெளஸ்துபம்—208)

என்னும் ஸ்லோகம் சொல்லி ப்ரார்திக்கவும். .பிறகு இந்த 16 தட்டுகளையும் எட்டு தம்பதிகளுக்கு கொடுத்து நமஸ்கரித்து ஆசி பெறவும்.. இவ்வாறு

செய்வதால் பெண்கள் சாஸ்திர ஸம்மத முறையில் தாங்கள் விரும்பும் நபருடன் திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக வாழ முடியும் என்கிறது சாஸ்திரம்..

ஹிமவான் தன் பெண்ணான பார்வதியை சிவனல்லாத ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுக்க தீர்மானித்தார். . பார்வதியின் தோழிகள் பார்வதியை வேறு ஒரு நதி கரைக்கு அழைத்து சென்று இந்த விரதம் செய்ய

சொன்னார்கள். . இதன் பயனாக பரமசிவன் நேரில் வந்து ஹிமவானின் ஸம்மதத்துடன்  பார்வதியை ஏற்று கொண்டதாகவும் பவிஷ்யோத்திர புராணம் கூறுகிறது. .

 ஆகவே தான் "ஆலிபி; ஹாரிதா யஸ்மாத் தஸ்மாத் ஸா ஹரி தாளிகா " என்பதாக ஆலி எனப்படும் தோழிகளால் அபகரித்து செல்லப்பட்டதால் இந்த விருதத்திற்கு ஹரிதாளிகா விருதம் எனப்பெயர் ஏற்பட்டது.
***************

25-8-2014. பிரதக்ஷிண அமாவாசை.

பிரதக்ஷிண அமாவாசை.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8225-பிரதக்ஷிண-அமாவாசை

Here is the message that has just been posted:
***************
25-8-2014. பிரதக்ஷிண அமாவாசை.

 அமாவாசை திங்கட்கிழமை  காலை பத்து மணிக்குள்ளும் அதற்கு மேலும் என்று இருக்கிறதோ அன்று ப்ரதக்ஷிண அமாவாசை எனப்படுகிறது

 திங்கட்கிழமை காலை .பத்து மணிக்கு மேல் அமாவாசை வந்தால் ப்ரதக்ஷிணம் கிடையாது.. அரச மரத்தை காலை பத்து மணிக்கு மேல் சுற்றக்கூடாது. மற்ற நாட்களில் காலை ஒன்பது மணிக்குள் சுற்றலாம்.

ஞாயிறன்று அமாவாசை வந்து அது திங்கள் கிழமை காலை பத்து மணி வரை அமாவாசை இருந்தாலும் ப்ரதக்ஷிணம் செய்யலாம்..ப்ரதக்ஷிண அமாவாசை தான்.

ப்ரதக்ஷிண அமாவாசை அன்று காலையில் 6 மணியிலிருந்து அரச மரத்தை பூஜை செய்து 108 முறை ப்ரதக்ஷிணம் செய்யலாம்.

ப்ரதக்ஷிணம் செய்யப் போகிற அரச மரத்துடன் வேப்ப மரமும் சேர்ந்து இருக்க வேண்டும்.. முறையாக அரச மரத்திற்கு பூணல் போட்டு வேப்ப மரத்துடன் ப்ரதிஷ்டை, திருமணம் செய்த அரச மரத்தை சுற்றுவதே சாலச் சிறந்தது..

முதலில் அரச மரத்திற்கு 16 உபசார பூஜை செய்ய வேண்டும்.. விரத பூஜா விதானம் புத்தகத்தில் உள்ள படி 16 உபசார பூஜை செய்த பிறகு சுற்ற ஆரம்பிக்கவும்.

எண்ணிக்கைக்காக முதன் முதல் ஆரம்பிக்கும் போது உருண்டை மஞ்சள் 108 எண்ணி வைத்து கொண்டு ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மஞ்சளாக அரச மர அடியில் ஒரு பாத்திரம் வைத்து அதில் போட்டு வரவும்.

அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவாசை வரும் போது 108 குங்கும்ம் பொட்டலங்களும், அதற்கு அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவாசை வரும் போது 108 தாம்பூலம் ( இரு வெற்றிலையும் ஒரு பாக்கும் வைத்து கட்டி அதை போடவும்.

 இதற்கு அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவசை வரும் போது 108 புஷ்பம் போடவும். இதற்கு அடுத்த தடவை ப்ரதக்ஷிண அமாவாசை வரும் போது கொய்யா பழம், அல்லது. சப்போட்டா,

 அல்லது ஆரஞ்சு , அல்லது எள்ளுருண்டை, வேற்கடலை உருண்டை, இம்மாதிரி எது வேண்டு மானாலும் உங்கள் செளகரியப்படி போட்டு சுற்றலாம்.

அமா ஸோம வார புண்ய காலே அச்வத்த ப்ரதக்ஷிணம் கரிஷ்யே என்று சொல்லி விட்டு சுற்றவும். சுற்றும்போது சொல்ல வேண்டிய மந்திரம்.
மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம:

அக்ஷி ஸ்பந்தம் புஜ ஸ்பந்தம் து:ஸ்வப்னம் துர் விசிந்தனம் சத்ரூணாம் ச ஸமுத்பன்னம் அச்வத்த சமயஸ்வ மே.

மரத்தின் அடிப்பகுதியில் ப்ருஹ்மாவாகவும், மரத்தின் நடுப்பகுதியில் மஹா விஷ்ணுவாகவும் மரத்தின் நுனி கிளை பகுதியில் சிவஸ்வரூபமாகவும்  காட்சியளிக்கும் மரங்களின் தலைவனான ஹே அரச மரமே உனக்கு நமஸ்காரம்.

காரணமில்லாமல் கண்கள் துடித்தல், தோள்கள் மற்றும் கைகள் துடித்தல் ,, கெட்ட ஸ்வப்னம் ஏற்படுதல், மனதில் கெட்ட எண்ணங்கள் தோன்றுதல், , எதிரிகளால் கஷ்டம் உண்டாகுதல் ஆகியவற்றிலிருந்து ஹே அரச மரமே என்னை காப்பாயாக.

முறையாக அரச மர ப்ரதக்ஷிணம் முடிந்தவுடன் இந்த 108 பழமோ பக்ஷணமோ இதை மற்றவர்களுக்கு கொடுத்து விட வேண்டும்.

இதனால் மும்மூர்த்திகள்  அருள் கிட்டும். பாபங்கள் விலகும் .ஏழரை சனியின் துன்பம் விலகி ஆயுள் அதிகரிக்கும்.

12 ஆண்டுகள் கழிந்த பிறகு ப்ரதக்ஷிண வ்ருதம் உத்யாபனம் செய்து விட வேண்டும் .வ்ருத சூடாமணி புத்தகத்தில் உத்யாபணம் செய்ய வேண்டிய முறை உள்ளது.
***************

​ ஆவணி மாத விரதங்கள்.

 கோகுலாஷ்டமி.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/8224-கோகுலாஷ்டமி

Here is the message that has just been posted:
***************
​​
ஆவணி மாத விரதங்கள்..

17-8-2014. கோகுலாஷ்டமி

ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷம் அஷ்டமி திதி ரோகிணி நக்ஷத்திரம் அன்று நள்ளிரவில் கிருஷ்ணாவதாரம்.. இன்று கிருஷ்ணர் பூஜை,இரவில் உபவாசம், பகலில்.. ஶ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ண ஜனனம் ( பத்தாவது ஸ்கந்தம் மூன்றாவது சர்க்கம்) பாராயணம் செய்யலாம். அல்லது பாராயணம் செய்வதை கேட்கலாம்.

11-8-2014 முதல் 17-8 14 முடிய ஶ்ரீமத் பாகவதம் சப்தாஹ விதிப்படி ஏழு நாட்கள் பாராயணம் செய்யலாம். அல்லது 17-8-2014 முதல் 23-8-2014 முடியவும் பாராயணம் செய்யலாம். கர்போத்சவம் அல்லது ஜனனோத்சவம் என்று கூறப்படும் இவை ஒன்றில் பாராயணம் அல்லது பிறர் சொல்ல கேட்டல் செய்வது சிறந்தது.

(1() முதல் ஸ்கந்தம் முதல் ஸர்க்கம் முதல் 3ஆவது ஸ்கந்தம் 19 ஆவது ஸர்க்கம் முடிய. யக்ஞ் வராஹ சரித்ரம் –நிவேதனம்:-- சக்கரை வள்ளி கிழங்கு;, கடலை உருண்டை.

(2)  3ஆவது ஸ்கந்தம் 20 ஸர்க்கம் முதல் 5ஆவது சர்க்கம் 3ஆவது ஸர்க்கம் முடிய; த்ருவ சரித்ரம்;-நிவேதனம் பழ வகைகள்.

(3). 5ஆவது ஸ்கந்தம் 4 முதல் 7ஆவது ஸ்கந்தம் 5ஆவது ஸர்க்கம் முடிய
ஶ்ரீ ந்ருஸிம்மாவதாரம்—நிவேதனம்—பானகம்—நீர்மோர்.

(4). 8ஆவது ஸ்கந்தம் ஒன்றாவது ஸர்க்கம் முதல் 10ஆவது ஸ்கந்தம் 3ஆவது ஸர்க்கம் முடிய.  பயோ விரதம்.  நிவேதனம்—பால் பாயாஸம்.

(5) 10ஆவது ஸ்கந்தம் 4 முதல் 10ஆவது ஸ்கந்தம் 54 ஆவது ஸர்க்கம் முடிய – ருக்மணீ கல்யாணம்—நிவேதனம்- பருப்பு தேங்காய்—பக்ஷணங்கள்.

(6). 10ஆவது ஸ்கந்தம் 55 ஆவது ஸர்க்கம் முதல் 11ஆவது ஸ்கந்தம் 13ஆவது ஸர்க்கம் முடிய. ---குசேலோபாக்யானம்—நிவேதனம்—அவல், பழம்.

(7) 11ஆவது ஸ்கந்தம் 14ஆவது ஸர்க்கம் முதல் 12ஆவது ஸர்க்கம் 13ஆவது ஸர்க்கம் முடிய --ஶ்ரீ பாகவத பூர்த்தி- நிவேதனம்- வடை; பாயஸம்; சக்கரை பொங்கல்.

இவ்வாறு செய்து வழிபடலாம்.. பாகவத ஸப்தாஹம் என்பது இம்மாதிரி பாராயணம் செய்வதே.
***************

Friday 18 July 2014

Sri Krishna Jayanthi - 19-08-2014 for Sri Matam Shishyas

SRI JAYANTHI--19-8-14

 DEAR  ALL, SRI JAYANTHI ON 19-8-14 TUESDAY FOR SRI AHOBILA
MUTT SISHYAS--PL SEE THE ATTACHMENT ---  HAR HARHARE
RAAMA HARE RAAMA RAAMA
RAAMA HARE HAREHARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HAR
E HARE E

HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE 
--------------------

Subject: SRI JAYANTHI--19-8-14

 DEAR  ALL,
SRI JAYANTHI ON 19-8-14 TUESDAY FOR SRI AHOBILA MUTT SISHYAS--PL SEE THE ATTACHMENT ---
 HAR HA
RHARE RAAMA HARE RAAMA RAAMA RAAMA HARE HARE
HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE E
Photo: Chapter - 6, Text 25<vbr><vbr>Gradually, step by step, with full conviction, one should become situated in trance by means of intelligence, and thus the mind should be fixed on the Self alone and should think of nothing else.<vbr><vbr>Please LIKE this page and help to preserve Srila Prabhupada's Original Books.<vbr>See Purport in Comment




HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE